Wednesday, November 24, 2010

மன்மதன் அம்பு படத்தின் கதை


மன்மதன் அம்பு, கமலும் மாதவனும் அன்பே சிவம் படத்திற்கு பிறகு இணைந்து நடித்துள்ளபடம். ரெட் ஜேயின்ட் மூவிஸ் தயாரிப்பு. இந்த படத்தின் கதை என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தியாவின் முக்கியமான தொழிலதிபரான மாதவன் தன் கல்லூரி தோழியான திரிஷாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். புது மணத்தம்பதிகளுக்கு பரிசாக உலகம் முழுக்க சுற்றி வரும் ஒரு கப்பலில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அதே கப்பலில் கனடாவில் வசித்து வரும் டிடேக்டிவான கமலும் அவரது மனைவியான வெளிநாட்டுப் பெண்ணும் பயணம் செய்கிறார்கள். இரண்டு தம்பதிகளும் பரஸ்பரம் பழக்கமாகிறார்கள்.நன்றாக போய் கொண்டிருக்கும் திருமணவாழ்க்கையில் திரிஷாவின் சில நடவடிக்கைகள் புரியாத புதிராக இருக்கிறது. இதற்கிடையில் திரிஷா கப்பலிலேயே காணாமல் போகிறார். கமலின் உதவியய் நாடுகிறார் மாதவன். கமலின் தலையீடு அறிந்த கடத்தல் கும்பல் கமலையும் அவரது மனைவியையும் தாக்குகிறார்கள். அதில் கமலின் மனைவி இறந்து விடுகிறார். பிறகு கமலின் பழிவாங்களும் திரிஷாவை மீட்பதும் தான் மீதி கதை.
இந்த படத்தில் விவாகரத்தான பெண்ணாக வரும் சங்கீதா ஒரு பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறாராம். வெறும் மியூசிக் மட்டும் வரும் அந்த பாட்டில் பழைய கமலை பார்க்கலாம் என்று படவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்பொதும் தனது படத்தில் ஒரு காட்சிக்கு வரும் கே.எஸ். ரவிக்குமார் இந்த படத்திலும் ஒரு காட்சிக்கு வருகிறார் ஆனால் அந்த வேடம் தான் படத்தின் மொத்த கதையையும் மாற்றுகிறதாம்














பின்குறிப்பு: இந்த மாதிரி யாராவது கதை சொல்லிகிட்டு அவங்க பிளாக் traffica ஏத்த பார்ப்பாங்க விட்டுடாதிங்க...
நண்பேன்டா....

No comments:

Post a Comment