நான் ஒரு ஒழுக்கமான மாணவன். பிட்டு அடிப்பது, பார்த்து எழுதுவது, கேட்டு எழுதுவது போன்றவை குற்றம் என்று எனது எல்.கே.ஜி. டீச்சர் உஷா மேம் சொன்னதை நான் தீவிரமாக இரண்டு வருடம் கடைபிடித்தேன். அந்த மெட்ரிகுலேசன் பள்ளியை விட்டு ஒன்னாவது பாரதிதேவி ஆரம்பபள்ளி தமிழ் மீடியத்தில் 6 மாசம் படித்த போதும் நான் அதை மீற வில்லை. அந்த பள்ளி பிடிக்கவில்லை என்று பாட்டியிடம் சொல்லி தேனியிலேயே இருக்கின்ற பெரிய ஸ்கூலாய்ப் பார்த்து அரைப்பரிட்சையின் போது சேர்ந்தேன்.அதற்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத நேர்ந்தது அதில் புத்தகம் பக்கத்தில் இருந்தும் எனக்கு எந்த கேள்வி தெரியாவிட்டாலும் நான் பார்த்து எழுதவில்லை.
அன்று spelling test. நடுவில் தமிழ்மீடியம் சேர்ந்து படித்ததால் நான் ஆங்கிலத்தில் மிகவும் சுமாரான மாணவனாய் இருந்தேன். அன்று தான் முதல் முதலாய் பார்த்து எழுதினேன்(காரணம் அதற்கு முன் பரிட்சையில் 24வது ரேங்க் வந்திருந்தேன் அது எனக்கு பெரும் அவமானமாய் இருந்தது denக்கு spelling தெரியாததால் எல்லொரும் என்னை கிண்டல் பண்ணி ஒரு பட்டப்பெயர் வைத்திருந்தார்கள்) .doctor என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங்க் தெரியாமல் எனக்கு முன் பெஞ்சில் அமர்ந்திருக்கும் சன்முகப்பிரியாவின் பேப்பரை பார்த்து எழுதி மன்னிக்க முடியாத பாவத்தை செய்தேன்.அவளும் தப்பாய் எழுதி மார்க் போனாலும் அது தான் நான் முதன்முதலில் பார்த்து எழுதியது.
இரண்டாவது படிக்கும்பொழுது நான் எழுதிய கவிதை சிறுவர்மணியில் வந்த பின்பு ஒரு ஹீரோவாக பள்ளியில் வலம் வந்தேன்.அதனால் எந்த டீச்சரும் என் மேல் சந்தேகப்படவில்லை.ருசி கண்ட பூனையாக நான் அப்போ அப்போ ஓரிரு வார்த்தைகள், கேள்விகள் என்று கேட்டு எழுதிக் கொண்டிருந்தேன்.ஆனால் ஏனோ தெரியவில்லை நான் நான்காவது ஐந்தாவது பார்த்து எழுதவேயில்லை. பின்பு ஆறாவதில் படிக்கக் கஷ்டமாக இருந்ததால் 5 பேர் கொண்ட குழு அமைத்து ஆளுக்கொரு கேள்வி படித்துவந்து எங்கள் டீச்சர் சொல்லிக் கொடுக்காத ஷேரிங்க் பண்ணுவோம். நாங்கள் ஐவரும் முதல் 10 ரேங்க் மாணவர்கள் என்பதால் எந்த டீச்சரும் எங்களை கூர்ந்து பார்க்கவில்லை பார்த்தாலும் எங்கள் ஐவர் படையின் கூட்டணியை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது.ஆனால் வினோதினி என்ற பெண்ணால் எங்கள் கிளாஸ் டீச்சரிடமே மாட்டி அவமானப்பட்டோம். அதற்கு பிறகு படை அமைத்து பண்ணுவதை விட்டுவிட்டு சின்னபுள்ள தனமாக one word மட்டும் கேட்டு எழுத ஆரம்பித்தேன்.
எங்கள் பள்ளியில் 8 வது வரை ஹிந்தி கண்டிப்பாக படிக்கவேண்டும். ஹிந்தியில் "மத்தியமா" என்ற பரிட்சைவரை எழுதவேண்டும். அதில் மிக நல்ல மார்க் வாங்கிய பசங்களை மட்டும் அடுத்த கட்டப் பரிட்சையான "ராஸ்ட்ரபாஸா" எழுதவைக்க முடிவுசெய்தனர். ஏதோ தப்பித்தவரி நானும் அந்த லிஸ்டில் வந்ததால் நானும் எழுதவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். எனக்கு ஹிந்தி எதிர்ப்பு போரட்டம் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் நான் அதை வன்மையாக எதிர்த்தேன்.ஆனால் மேடமிடம் சொல்லும் அளவுக்கு தைரியமில்லை ( நல்ல பையன் இமேஜ் போய்விடுமோ என்ற பயம்).ஆனாலும் பால் பேட்மிடன் பிளேயர் என்று நானும் என் நண்பன் இராமகார்த்திக்கும் ஓடிவிடுவோம். எங்களுக்கு அதில் ஒரு பாடம் கூட தெரியாது.கடைசி நேரத்தில் ஏதோ அச்சுபிச்சு படித்துவிட்டு நாங்கள் பரிட்சைக்குப் போனோம்."ராஸ்ட்ரபாஸா" இரண்டு பரிட்சைக்களாக வைக்கப்படும் ஒன்று காலையில் மற்றொன்று மதியம் எங்கள் டீச்சர் பரிட்சைக்குப் போகும் முன் சொன்னார்.
"நீங்க எப்படியும் பாஸாக மாட்டீர்கள் அதனால் பிட்டு எடுத்து போங்கள்" என்றார்.எங்களிருவரை மட்டும்மல்ல எல்லொரையும் தான். ஆனால் நாங்கள் இருவரும் பிட் எடுக்காமலே போய் எழுத்திவிட்டு வந்தோம் ஏனென்றால் நாங்கள் நல்லவர்கள் என்று எங்கள் க்ரஷ்களுக்குக் காண்பித்துக் கொள்ள நினைத்தோம். பரிட்சையில் என் கிரஷ் என் பேப்பரை பார்த்து "தோகே" (திருக்குறள் மாதிரி இருவரி இருக்கும் கவிதை) எழுத அந்த சந்தோஷத்தில் நான் என்ன எழுதினேன் என்றே தெரியவில்லை தாறுமாறாக கண்டதையும் எழுதிவிட்டு வந்தேன்.ஆனால் எங்கள் கிரஷ்களே காலையில் பிட் எடுத்து சென்றதை அறிந்ததால் மதியம் நாங்களும் பிட் எடுத்துச் செல்ல துணிந்தோம். எல்லா பிட்டையும் ஒருவரே எடுத்துச் செல்லாமல் பக்கத்தில் இருப்பவர்களுடன் ஷேர் பண்ணிக்கச் சொல்லி டீச்சரே சொன்னார்.என் பக்கத்தில் என் கிரஷ் என்பதால் நானும் அவளும் பிட்டை ஷேர் பண்ணப்போகிறோம் என்கிற சந்தோஷத்தில் நிரையபிட்டுகளை அவளிடம் கொடுத்துவைத்தேன் (அப்ப தான அடிக்கடி கூப்பிட்டுக் கேட்க முடியும்). ஆனால் என் நேரம் என் கிரஷ், இராமக்கார்த்திக், அவனுடைய கிரஷ் எல்லொருமே வேர ஹாலாகிப் போனார்கள். என் பக்கத்தில் ரூல்ஸ் ராமானுஜம் உட்கார்ந்து இருந்தான்.ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளியின் ரூல்ஸை மதிக்காத ஒருத்தன் இருப்பான். எதையுமே மதிக்காமல் எல்லாவற்றையும் மதிப்பவன் போலவே ஒருவன் இருப்பான் (என்னை போல்). எல்லாவற்றையும் மதிப்பவன் ஒருத்தன் இருப்பான். அப்படி ஒருத்தன் தான் அந்த ரூல்ஸ் ராமானுஜம். அவன் பக்கத்தில் உட்கார்ந்ததைப் பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.சரி சமாளிப்போம் என்று நான் எடுத்துச் சென்ற பிட்டை எடுக்கலாம் என்று பார்த்தால் என் ஹாலில் ஒரு பெண் பிட்டைப் பார்த்து எழுதும்போது மாட்டிக்கொண்டாள். அதைப் பார்த்து இன்னொருவனுக்கு கால் நடுங்கி ஸாக்ஸில் இருந்த பிட் எல்லாம் விழுந்து அது பறந்து சூப்பிரவைசரிடம் சிக்கி பெரிய பிரச்சனையாகிவிட்டது.அதற்கு மேலும் எனக்கு பிட் எடுப்பதற்கு தைரியம் இல்லை.ஒரு கேள்வி கூடத்தெரியாமல் உட்கார்ந்திருந்தேன் இவ்வளவுக்கும் நடுவே எனக்குமுன் அமர்ந்திருந்த பெண் பேர் பாக்கிய ஸ்ரீயா? இல்லை ஆஷாவா? என்று தெரியவில்லை. அவள் கொஞ்சம் கூட பயப்படாமல் பிட் அடித்துக்கொண்டிருந்தாள் அவள் அடித்த வேகத்தைப் பார்த்தால் ஏழெட்டு பிட்டுகள் ஓடியுருக்கும் போல் தெரிந்தது.அவளைப் பார்த்து பாஸ் ஆகிறவரிக்கும் எழுதிவிட்டு ரூல்ஸ் ராமானுஜத்திடம் என் பேப்பரைக் கொடுத்தேன்.
"இது எல்லாம் ரொம்ப தப்புடா" என்றான்.அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன்.அவன் ஏதேதோ எழுதினான்.பரிட்சை முடிந்து வெளியே வந்ததும் எல்லோரும் தங்களின் பிட்டு பிரதாபங்களைச் சொல்லிக்கொண்டிருந்தோம்.
பரிட்சை முடிவுகள் நல்ல படியாகவே வந்தது. நான் first class ல் பாஸ் பண்ணினேன்.கிட்டத்தட்ட எல்லோரும் அப்படித் தான். ரூல்ஸ் மட்டும் செகெண்ட் கிளாஸில் பாஸாணான். அவனுக்கு மானசிகமான் இரசிகனானேன். ஒருவேளை இது தமிழ் சினிமாவாகவும் நான் கதாநாயகியாகவும் இருந்திருந்தால் அவன் மேல் காதல் கொண்டிருப்பேன்.ஆனால் அந்த முடிவுகள் அவனையும் பிட் அடிக்கவைக்க ஆரம்பித்தன.எனக்கு இன்னும் அதை நினைத்தால் ஏதோ செய்யும்.
(இந்த பதிவை நான் இப்பொழுது எழுதுவதற்கு காரணம் நான் கல்லுரி வந்தபின்பு பார்த்து எழுதேவே இல்லை, ஏன் என்று தெரியவில்லை ஒருவேளை அவனை மாதிரி நானும் மாறி இருக்கலாம்.இல்லை அரியர் தாங்குவதற்கான சக்தி வந்திருக்கலாம்.)
நண்பேன்டா....
No comments:
Post a Comment