நான் ஒரு வெட்டிப்பயல்.. அவன் ஒரு சோம்பேரி..நான் ஒரு முட்டாள்... அவன் ஒரு கிறுக்கன்... அவனொரு டோமரு.. நான் ஒரு பட்பலாங்கி...இதனாலே நாங்கள் நண்பர்களாகி விட்டோம்...
எங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நடந்தது என்னவோ சாதாரணமாகத் தான்..என் கல்லூரியில் எனக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருப்பவன் என்பதைத் தவிர எனக்கும் அவனுக்கும் வேறு ஒரு சம்மந்தமும் இல்லை....என் ரூம்மெட்டின் அருகில் அமர்ந்திருப்பவன் என்பதால் அவனை பற்றி செவி வழிச் செய்திகள் மட்டும் தினமும் கேட்டுக்கொண்டே இருந்தேன்.அவனொரு குடிகாரன், பெண்பித்தன், கஞ்சாகுடிக்கி.. என்று பலவாறு அவனைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.அவன் கடவுள் மறுப்பாளன் என்பதால் அவனது எல்லா கெட்டப்பழக்கத்தையும் தாண்டி அவனைப் பிடித்தது(நான் ஒரு டிடோட்டலர் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்). ஆனாலும் அவனோடு பேசியதில்லை.அவன் ஒழுங்காய் கல்லூரிக்கு வருவதில்லை. கல்லூரிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு படத்திற்கு போய்விடுவான் என்று நண்பன் சொன்னான்.
ஆனால் எதுவுமே உண்மையில்லை என்பது அவனுடன் பழக்கம் ஏற்பட்ட சில நாட்களிலேயே தெரிந்து விட்டது. தன்னை ஒரு டெரராகக் காட்டிக் கொள்வதற்காக எல்லாம் அவன் போட்ட பிட்டுகள்.பயல் ஒரு வெத்து சோறு...ஒரு கட்டிங்க் என்றால் என்னனே தெரியாத அப்பாவி..ஒரு நாள் என் கல்லூரி தோழி ஒருத்தியின் புத்தகம் ஒன்றை எடுத்துப் பார்த்தேன்.அப்போது அவள் அங்கே இல்லை என்பதால் நான் எடுத்ததை அவள் அறியவில்லை.அவள் தேடப் போகிறாளே என்று இவனிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வேறு வேலையாய் சென்று விட்டேன்(I AM ALWAYS BUSY).
அரை மணிநேரம் கழித்து வந்தேன் அந்த தோழி ஏதொ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தாள்.பயல் சற்றுத் தள்ளி அவளையே பார்த்து நின்றுகொண்டிருந்தான் கையில் நான் கொடுத்த புத்தகம், எனக்கு விளங்கி விட்டது.அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டு
"நான் தான் எடுத்தேன் பயலிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தேன் பாவம் மறந்து விட்டான் போல இருக்கு" என்றேன்.
அதற்கு அவள் "நான் அவனிடம் கேட்டதற்கு தெரியாது என்று தலை ஆட்டினான்" என்றாள்.
"தெரியும்னு ஆட்டனும்னு தான் நினைச்சேன் ஆனா அந்த பொண்ணு திடீர்னு கேட்ட பதட்டத்தில மண்டய மாத்தி ஆட்டிடேன்டா.."என்றான். இவனை எல்லாம் டெரரர்னு எஃபெக்ட் கொடுத்த என் ரூம்மேட்டை போய் பொலருன்னு ஒன்னு விடனும் போல தோனுச்சு...ஆனாலும் காந்தி பிறந்த மண்ணில் அடிக்க எல்லாம் கூடாதுனு விட்டுட்டேன்.(நான் ஒரு அஹிம்சாவாதி)...
சரி கட் அடிச்சிட்டு படத்திற்கு போயிருக்கனே அப்படியாவது வீரம் இருக்கே(கட் அடிப்பதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காத ஒரு student number 1 நான்)னு பாத்தா வீட்ல அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டுத்தான் தலைவரு போவாராம்.
நண்பன் பண்ற காமெடியை வச்சுக்கிட்டு சர்தார்ஜி ஜோக் மாதிரி இவன் பேர்ல ஜோக் எழுதலாம்.இப்படி பட்ட ஒருத்தன நண்பனா வச்சுக்கிட்டு 5 star ஹொட்டலா ஆரம்பிக்கமுடியும்... அதான் இப்படி ஒரு பிளாக் ஆரம்பிச்சிருக்கேன்...